பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம்!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலவச சீருடை விநியோகம் தொடர்பான நடைமுறை விதிகள் தொடர்பான சுற்றறிக்கை சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலவச சீருடைகள் வலய, கோட்டக் கல்வி அதிகாரிகளால் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 10,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கான சீருடைத்துணிகள் முழுவதையும் மக்கள் சீனா இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...