ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து அடைக்கலம் வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Date:

ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக இன்றைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘மியன்மார் ரோஹிங்யா அகதிகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும்,  அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்’ என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கோரிக்கை அடங்கிய கடிதமொன்றும் போராட்டக்காரர்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

 

Popular

More like this
Related

அஸ்ஸைய்யித் ஸாலிம் ரிபாய் மெளலானாவின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய்...

அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண...

நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

சுகாதார சேவையின் உச்ச பலனை  இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார...

பஹன மீடியா தலைவரின் தாயார் மறைவு!

பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரும் மீட்ஸ் செயல்திட்டத்தின் ஸ்தாபகருமான சமூக செயற்பாட்டாளர்...