துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது: பாதுகாப்பு அமைச்சு

Date:

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எந்த நேரத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, காவல்துறை மற்றும் இராணுவத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தற்போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இருப்பினும், போர் இடம்பெற்ற காலத்தின் போது காவல்துறை மற்றும் இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பித் தருவதற்கான காலக்கெடு ஜனவரி 20 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...