பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: விசாரணைகள் தீவிரம்

Date:

கண்டி மாவட்டம் – கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில்  மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவரை வேனில் வந்த மர்ம கும்பல் கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காம்பொல – மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,  ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை  கடத்திச் சென்றுள்ளனர். பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன்,  அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடத்தலில் ஈடுபட்டவர் கம்பளை – கஹடபிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் நசீர் எனவும் கடத்தலில் ஈடுபட்ட நபர் சிறுமியின் உறவினர் என்பதுடன் குறித்த நபர் கத்தார் மற்றும் ஜப்பானில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ரக வாகனம் துருவெல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

 

 

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...