தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் 3 நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜொன்டி ரோட்ஸ்க்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.