பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானங்களால் பாரிய இழப்பு!

Date:

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், அவற்றிற்காக மாதாந்தம் 9 இலட்சம் டொலர்கள் தவணைகளாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (25) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.

“ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் மொத்தம் 22 விமானங்கள் உள்ளது. தற்போது, பிரதான விமான சேவைக்கு 3,194 பணியாளர்களும், மூலோபாய வணிக அலகுகளில் 2,862 பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.

விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 முதல் ஐந்தாண்டு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அமைச்சு ஆய்வு செய்து வருகின்றது.

அதன்படி, இந்த ஐந்து ஆண்டுகளில் விமான சேவையானது செயற்பாட்டு இலாபத்தையும் அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...