காசாவில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்: முதல்நாளில் 1 இலட்சத்துக்கும் மேல் மாணவர் பதிவு..!

Date:

ஒக்டோபர் 2023 தொடங்கிய இன அழித்தொழிப்புக்கு பின்னர் காசாவில் புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 23இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் காசாவில் பல பாடசாலைகளிலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகை பதிவுசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

16 மாதங்களுக்கு பின்னர் காசாவில் 165 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன. 16 மாத கால இன அழிதொழிப்பில் 12,800 மாணவர்களும் 800 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

காசாவின் 85 வீதமான பாடசாலைகள் (1166) முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. கல்வித்துறைக்கு இழப்பு மட்டும் 2 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...