எரிபொருள் விநியோகஸ்தர்களினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மனு..!

Date:

எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் குழு ஒன்றினால் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசிய எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவும் பல அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும், இந்த விவகாரத்தைத் தீர்க்க எரிபொருள் வணிக சங்கங்களின் சில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) ஆகியவை எரிபொருள் விநியோகத்திற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...