இஸ்ரேல் செல்லும் அதிகமான இலங்கை பணியாளர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள்!

Date:

போதைப்பொருள் கடத்தல் இஸ்ரேலில்  அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது.

இதன் விளைவாக இலங்கையிலிருந்து வேலைக்குச் சென்றுள்ள பணியாளர்கள் ஐஸ் மற்றும் மர்ஜுவானா போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இது இலங்கை பணியாளர்களின் மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தங்களது தொழிலை பாதுகாத்துக் கொள்வதா? அல்லது இழப்பதா? என்ற பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தொழிலுக்காக சென்றுள்ளவர்கள் அங்கு சமூக ஊடகக் குழுக்களை உருவாக்கி அதனூடாக தமது வசதிகளை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் இது அவர்களது விசாவை ரத்துச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டட நிர்மாணப்பணிகளுக்காக இன்று இலங்கையிலிருந்து செல்லும் 217 இலங்கை தொழிலாளர்களுக்கு மத்தியில் ஒன்லைனில் உரையாற்று போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு கட்டட நிர்மாணப் பணிக்களுக்காக 6096 பேருக்கு. தொழில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் 1018 பேர் ஜனவரியில் இஸ்ரேல் சென்றுள்ளனர். இன்னும் இரண்டு குழுவினர் மார்ச் 10,25ஆம் திகதிகளில் வெளியேறி செல்லவுள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...