இஸ்தான்புல்லில் 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Date:

துருக்கியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாக பதிவாகி இருந்தன.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டில் இன்று பிற்பகல் 3.19 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து 80 கிமீ தொலைவில் சிலிவ்ரி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் இஸ்தான்புல் அச்சமூட்டும் வகையில் குலுங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இஸ்தான்புல் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான பாதிப்பு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...