காத்தான்குடி செயின் மெளலானா ஜும்மாப் பள்ளிவாயலில் நேற்று(25) (வெள்ளிக்கிழமை) ஜும்ஆப் பேருரை சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு கண்களும் பார்வையற்ற விஷேட தேவையுடைய அறிஞர் அஷ்ஷெய்க் MJM அர்கம் ஹசனி அவர்கள் இந்த ஜும்ஆப் பயானை நிகழ்த்தி அனைவரையும் ஈர்த்தார்.
மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமையை மையமாக கொண்டு வழங்கிய அவரது உரை, சிறப்பாகவும் ஆழமாகவும் இருந்தது. பார்வையிழந்திருந்தாலும் உலகத்தை மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அவரது ஆற்றல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஜும்ஆ முடிவில், அர்கம் ஹசனி அவரை நேரில் சந்தித்த பள்ளிவாயல் நிர்வாகிகள், எதிர்வரும் ஜும்ஆக்களில் போதைவஸ்துக்கள் எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதற்கு அவரும் ஒப்புதல் வழங்கினார்.
இத்தகைய அருமையான ஜும்ஆப் பேருரையை ஏற்பாடு செய்த செயின் மெளலானா பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.