இலங்கை ஆய்வாளர் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

Date:

இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார்.

‘இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத் துறையின் பங்கும் அதனை அபிவிருத்தி செய்தலும்’ – ஓர் ஆய்வு என்ற தலைப்பில் அவர் மேற்கொண்ட ஆய்வுக்கே இந்த கலாநிதி பட்டம் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.

கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் ஆகில் அவர்கள் அக்குறணை அல் மீஸானிய்யா கலாசாலையில் கற்று வெளியேறிய குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒருவர்.

காலியில் அமைந்திருக்கின்ற இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் தன்னுடைய ஷரியா துறை ஆரம்ப நிலைய பூர்த்தி செய்த இவர் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு இணைந்து தன்னுடைய உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

அந்தவகையில் பொருளாதாரத்துறையில் மிகச்சிறப்பான முறையில் சித்தியடைந்து கலாநிதி பட்டத்தை பெற்ற அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் அவர்களை Newsnow.lk வாழ்த்துகிறது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...