தேர்தல் சட்டங்களை மீறியதாக பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பஃப்ரல் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

“மே 3, 2025 முதல் அமைதியான காலத்திற்குப் பிறகும் கூட, பிரதமர் அமரசூரிய தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை நாங்கள் கண்காணித்துள்ளோம்.

பிரதமரின் இந்தக் கருத்து, அவரது ஆதரவாளர்களை தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்,” என்று PAFFREL நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...