லெபனானில் ஹமாஸின் முக்கிய தலைவர் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்!

Date:

லெபனானில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொறியியலாளர் காலித் அஹ்மத் அல்-அஹ்மத் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்தபோது, வடக்கு லெபனானில் உள்ள சிடோனில்  மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார்.

இவரது மரணம் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘நமது வீரத் தியாகிக்காக இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எல்லாம் வல்ல இறைவனிடமும், பின்னர் நமது மக்களிடமும்,  நமது தேசத்திடமும்,எதிர்ப்பின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று உறுதியளிக்கிறோம். தியாகிகளின் இரத்தம் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஒரு கலங்கரை விளக்கமாகவே இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 மாதங்களாக பலஸ்தீனிய குழுக்களுக்கு எதிராக லெபனானில் உள்ள ஹமாஸ் உறுப்பினர்களை இஸ்ரேலின் இராணுவம் அடிக்கடி குறிவைத்து வருகிறது.

இதனிடையே, அக்டோபர் 7, 2023-இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில், ஹமாஸ் லெபனானில் இருந்தும் ராக்கெட் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...