நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

Date:

இன்று (07) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹர நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார்.

கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர குற்றப் புலனாய்வுத் துறையால் தேடப்பட்டு வந்தார்.

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த பிரசன்ன ரணவீர மற்றும் மற்றொரு சந்தேக நபரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...