நேற்று இஸ்ரேல் சுதந்திர தினம்: இன்று பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

Date:

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 77 வருடங்கள் நிறைவு ஏப்ரல் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடந்த இஸ்ரேல் சுதந்திர தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வொன்று இலங்கை இஸ்ரேல் நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘யௌம் ஹ ஆத்ஸ் மௌத்’ என அழைக்கப்படும் இந்த இஸ்ரேல் உருவாக்கப்பட்ட தினத்தை உலகெங்கும் உள்ள யூதர்களும் இஸ்ரேலை ஆதரிப்பவர்களும் அனுஷ்டிக்கின்றனர்.

சுதந்திரக் கொண்டாட்டங்களில் வழமையாக நடைபெறும் தீபமேற்றும் நிகழ்வு இஸ்ரேலைச் சூழ்ந்திருந்த காட்டுத் தீ காரணமாக நடைபெறவில்லை என்பதோடு விமான சாகசங்களும் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக இம்முறையை சுதந்திர நிகழ்வில் இடம்பெறவில்லை.

பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அங்கிருந்து 750,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நக்பா தினம் இன்று இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...