காத்தான்குடி நகர சபையில் மு.கா. ஆட்சியமைப்பு – தவிசாளராக அஸ்பர்

Date:

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 10 ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்துடன் காத்தான்குடி நகர சபையில் ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

தவிசாளர் சாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் செயலாளர் கட்சித் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் முன்னிலையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (14) மாலை கையளித்தார்.

காத்தான்குடி நகர சபையின் 18 ஆசனங்களில் ஸ்ரீ ல மு கா 10, NPP 3, ஐக்கிய மக்கள் சக்தி 1, NFGG 2, இலங்கை தொழிலாளர் கட்சி 1, சுயாதீனக் குழு 1 ஆசனங்களை வென்றிருந்தன.

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...