துருக்கி ஜனாதிபதியை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

Date:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார்.

அங்கு துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் முதன்மையாக  கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடனான மோதலின் போது அர்தூகானின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் ‘எக்ஸ்’ பதிவில், “இன்று இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானைச் சந்தித்தது ஒரு மரியாதை.

சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது எங்களுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இந்த பிரச்சினையில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்தன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களையும் வழங்கி உதவின.

தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் சமயத்தில் தங்களுக்கு உதவிய துருக்கிக்கு நன்றி சொல்லும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...