சிக்குன்குனியாவின் பரவல் தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

இலங்கையில் தற்போது சிக்குன்குனியாவின் பரவல் தீவிரமாகியுள்ளது. முக்கிய நகர்ப்புறங்களில் இது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வைரஸின் மிகக் கடுமையான மீள் எழுச்சியைக் குறிக்கிறது.

கடவத்தை, கொத்தொடுவ, பத்தரமுல்லை மற்றும் கம்பஹாவின் நெரிசலான பகுதிகள் ஆகியவை அதிகம் ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காய்ச்சல், மூட்டு வலி, குளிர் மற்றும் உடல் வலிகள் இதன் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சில நோயாளிகளில், மூட்டு வலி வாரக்கணக்கில் நீடிக்கும்.

இந்த வைரஸ் நுளம்பு கடித்தால் பரவுகிறது, ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதன் மூலம் அல்ல. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவ‍ேளை, இலங்கையில் சிக்குன்குனியா ஒரு சுகாதார ஆபத்து என்று கூறி, அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் பயண எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளன.

மேலும், நோய் பரவுவதைத் தடுக்க, மேல் மாகாணத்தில் ஒரு வார கால டெங்கு மற்றும் கொசு கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...