சிக்குன்குனியாவின் பரவல் தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

இலங்கையில் தற்போது சிக்குன்குனியாவின் பரவல் தீவிரமாகியுள்ளது. முக்கிய நகர்ப்புறங்களில் இது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வைரஸின் மிகக் கடுமையான மீள் எழுச்சியைக் குறிக்கிறது.

கடவத்தை, கொத்தொடுவ, பத்தரமுல்லை மற்றும் கம்பஹாவின் நெரிசலான பகுதிகள் ஆகியவை அதிகம் ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காய்ச்சல், மூட்டு வலி, குளிர் மற்றும் உடல் வலிகள் இதன் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சில நோயாளிகளில், மூட்டு வலி வாரக்கணக்கில் நீடிக்கும்.

இந்த வைரஸ் நுளம்பு கடித்தால் பரவுகிறது, ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதன் மூலம் அல்ல. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவ‍ேளை, இலங்கையில் சிக்குன்குனியா ஒரு சுகாதார ஆபத்து என்று கூறி, அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் பயண எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளன.

மேலும், நோய் பரவுவதைத் தடுக்க, மேல் மாகாணத்தில் ஒரு வார கால டெங்கு மற்றும் கொசு கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...