அல்குர்ஆன் தர்ஜுமாக்களை புதிய விளக்கங்களுடன் வெளியிடுவதற்கு சிபாரிசு செய்துள்ள முஸ்லிம் திணைக்கள குழு

Date:

2024.05.16 ஆம் தேதி புனித மக்காவில் வசிக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரினால் அனுப்பி வைக்கப்பட்ட 15,000 குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும் இன்று வரை சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அல்குர்ஆனின் சிங்கள தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்புகளுடன் 20,000 அல்குர்ஆன் பிரதிகளும் இன்னும் சில இஸ்லாமிய நூல்களும் அடங்கிய கொள்கலன் 2024.06.22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது இதில் அல்குர்ஆன் பிரதிகளைத் தவிர ஏனைய நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் இருந்து வெளிவராமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அல் குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களையும் ஏனைய நூல்களையும் வெளியில் எடுப்பதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீடுகள் குழு சிபாரிசு வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில் அல்குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களில் மேலதிக விளக்கங்களை அடிக்குறிப்பிட்டு வெளியிடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிய வருகிறது

குறித்த சிபாரிசு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினால் புத்த சாசன சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...