நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் !

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள  தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை (29) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (31) காலை 8 மணி வரையான 36 மணிநேரத்தில், மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 31 வீதமான மின்தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளன என்றார்.

மின்தடைகள் குறித்து 1987 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...