சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!

Date:

சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக JCPSM தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

துணை மருத்துவ சேவை பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, முறையான கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வேலைநிறுத்தத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...