ரயில் பயணத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

Date:

ரயில் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமொன்று செயற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரயில்களில் உள்நுழையும்போதும், வெளியேறும்போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, 1971 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...