51ஆவது G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஆரம்பம்

Date:

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்த G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது.

மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் G7 உச்சி மாநாடு இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, உக்ரைன் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட உலகம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...