காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு: மேயராக சுனில் கமகே தெரிவு

Date:

காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து 36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 17 இடங்களை மட்டுமே வைத்திருந்த போதிலும், இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 19 உறுப்பினர்களால் வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 16 உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...