சிட்னியில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தாக்கப்பட்ட கிறீன்ஸ் கட்சி உறுப்பினர் : ஒரு கண் பார்வை பறிபோகும் நிலை

Date:

பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்படும்போது தாக்கப்பட்ட முன்னாள் கிறீன்ஸ் வேட்பாளர் ஹன்னா தாமஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிட்னி தென்மேற்கு பகுதியிலேயே நேற்று இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முற்படுகையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போதே ஹன்னா தாமஸின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 35 வயதான அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது சத்திரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள கடுமையான போராட்ட எதிர்ப்பு சட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக பலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை பூதாகரமாக சித்தரிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டங்கள் பொலிஸாருக்கு கடும் வன்முறையை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான துணிச்சலை வழங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காரணமாக காசாவில் பொதுமக்கள் அனுபவிப்பதுடன் ஒப்பிடும்போது நான் அனுபவிப்பது ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் காசாவில் காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறுப்புக்களை மயக்கமருந்து இல்லாமல் துண்டிக்கும் நிலை காணப்படுகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.
ஹன்னா தாமஸ், கூட்டாட்சி தேர்தலின்போது கிரேண்ட்லர் தொகுதியில் பிரதமர் அந்தோனி அல்பானீஸியை எதிர்த்து, கிறீன்ஸ் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார். அவரின் கண் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...