பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்: சாரதி, நடத்துனரின் கவனக்குறைவே காரணம்!

Date:

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (03) தினம் இடம்பெற்றது. சம்பவத்திற்குப் பின்னர், வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக இது தெரியவந்துள்ளது.

மேலும், மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை கவனத்துடனும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...