இலஞ்சம் பெற்ற இறைவரி திணைக்கள உயர் அதிகாரி கைது!

Date:

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, இன்றையதினம் (07) குறித்த உயர் அதிகாரி இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரின் தெமட்டகொடை பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றின் வருடாந்த வரி அறிக்கையினை சரிபார்த்து வழங்குவதற்காக சந்தேகநபரான பிரதி ஆணையாளர் ரூ. 100,000 பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இலஞ்சத் தொகையை ரூ 50,000 ஆக குறைக்க முன்வந்த அதிகாரி, அதிலிருந்து ரூ. 42 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ. 8,000 பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த வேளையிலேயே, இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான குறித்த சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...