வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

வரட்சியான காலநிலை காரணமாக  நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதுடன், கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் நீரை பயன்படுத்துகின்றனர்.இதனால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும், வாகனங்களை கழுவுதல், தோட்டங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...