ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும் நூல் வெளியீட்டு விழா

Date:

சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

செயற்பாட்டாளர் எஸ். சிவகுருநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் மற்றும் அலியார் அசீஸ் (வெளிநாட்டுத் தூதுவர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு மேலாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை மையமாகக் கொண்டது. மிக விரிவான ஆவணங்கள், தரவுகள் மற்றும் நியாயமான விசாரணைகள் அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...