விளையாட்டு துறையில் சாதித்த புத்தளம் மாணவர்கள்: வெற்றி பதக்கங்களை வென்று சாதனை

Date:

எம்.யூ.எம்.சனூன்

விளையாட்டு துறையில் புத்தளம் நகர பாடசாலைகளை சேர்ந்த ஐந்து மாணவர்கள் கடல் கடந்து வெற்றி பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள்.

மலேசியாவில் நடைபெற்ற 17வது CK கிளாசிக் சர்வதேச திறந்த டைக்வுண்டோ சாம்பியன்ஷிப் (Open Taekwondo) போட்டிகளில் பங்குபற்றிய புத்தளம் மாணவர்கள் 15 ற்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று இலங்கை நாட்டுக்கும், புத்தளம் நகருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பயிற்றுவிப்பாளரும், தடகள வீரருமான இஷாரா பியூமாலி சமரகோன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள், புத்தளம் சாந்த அன்றூஸ் தேசிய பாடசாலை மாணவி என்.ஈ.அசேன் விஷ்மிகா மூன்று தங்கப்பதக்கங்கள், புத்தளம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவி ஏ.ஆர்.எப்.ஹனா மஸ்யத் சாரா இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.எச்.ரீமா செய்ன் இரண்டு தங்கப்பதக்கங்கள், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.ஷாதின் அஹமத் மூன்று வெள்ளி பதக்கங்கள் என 15 பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டியுள்ளனர்.

இந்த வெற்றி வீரர்கள் ஐவரையும் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்கின்ற நிகழ்வு புத்தளம் நகர மத்தியில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.

புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களோடு புத்தளம் பீனிக்ஸ் அகடமி நிர்வாகமும் இணைந்து இந்த ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்திருக்கின்ற பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையிலே நடைபெற்ற இது தொடர்பான பிரதான நிகழ்விலே புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட வெற்றி வீரர்கள் கேக் வெட்டி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...