நிலந்த ஜயவர்தனவை, பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

Date:

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம், அவருக்கு எதிராக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், நிலந்த ஜயவர்தன குற்றவாளி என கண்டறியப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரான லலித் ஏகநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அவரை காவல்துறை சேவையிலிருந்து நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பணியாற்றி இருந்தார்.

புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதும், அதனை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்காமை காரணமாக, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கிலும் முன்னதாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...