நிலந்த ஜயவர்தனவை, பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

Date:

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம், அவருக்கு எதிராக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், நிலந்த ஜயவர்தன குற்றவாளி என கண்டறியப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரான லலித் ஏகநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அவரை காவல்துறை சேவையிலிருந்து நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பணியாற்றி இருந்தார்.

புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதும், அதனை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்காமை காரணமாக, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கிலும் முன்னதாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...