44 வீத பெரும்பான்மை ஆசனம் வென்ற NPP தலைமை வேட்பாளர் 1 வாக்கினால் வெலிகம பிரதேச சபையில் தோல்வி: ஆட்சி SJB வசம்

Date:

45 ஆசனங்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் 22 ஆசனங்களைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாமல் போயுள்ளது.

வெலிகம பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி 22 ஆசனங்களை வென்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி 9, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 6, ஐக்கிய தேசியக் கட்சி 2, சர்வஜன அதிகாரம் 2, மக்கள் கூட்டணி (PA ) 1, சுயேட்சை 3 ஆசனங்களை ப் பெற்றிருந்தன.

இந்த நிலையில் பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடந்த வெளிப்படையான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (9) ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன (6), ஐக்கிய தேசியக் கட்சி (2), சர்வஜன அதிகாரம் (2), மக்கள் கூட்டணி (PA ) (1), சுயேட்சை (3) இணைந்து வழங்கிய 23 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவானார்.

எதிர்க் கட்சி உறுப்பினர் தெனகம ராஹுல தேரோ பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...