இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

Date:

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் அடங்குவர்.

மருத்துவமனை தாக்கப்பட்டபோது மருத்துவமனையின் பிரதான வாயிலில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தில் இருந்த ஏழு பேர் கொண்ட குழுவில் அவர்களும் அடங்குவர்.

இஸ்ரேலிய இராணுவம், அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டது.

அவரை “பயங்கரவாதி” என்றும், அவர் “பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டது.

இஸ்ரேலுக்கும், அல் ஜசீராவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலை அல் ஜசீரா கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “இரத்தக்களரி குற்றம்” என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...