இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

Date:

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் அடங்குவர்.

மருத்துவமனை தாக்கப்பட்டபோது மருத்துவமனையின் பிரதான வாயிலில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தில் இருந்த ஏழு பேர் கொண்ட குழுவில் அவர்களும் அடங்குவர்.

இஸ்ரேலிய இராணுவம், அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டது.

அவரை “பயங்கரவாதி” என்றும், அவர் “பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டது.

இஸ்ரேலுக்கும், அல் ஜசீராவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலை அல் ஜசீரா கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “இரத்தக்களரி குற்றம்” என்று கூறியுள்ளது.

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...