இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளி: ஏறாவூரில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுகூரும் 35வது ஸுஹதாக்கள் தினம்!

Date:

 ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

 தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 121 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனங்களில் ஆறாத காயமாகவும் இருந்து வருகிறது. புலிகளின் இந்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அரசியல் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

அதேநேரம் “அல்லாஹ் அந்த ஷுஹதாக்களை பொருந்திக் கொள்ளட்டும்; அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கட்டும்” என கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...