புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவிக்கும் புத்தளம் House of Religion அமைப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்

Date:

புத்தளம் House of Religion அமைப்பினர் இன்று (25) புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிரத்னவை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தனர்.

சந்திப்பின்போது, புத்தளம் மாவட்ட House of Religion அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினர். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகளுக்கான அமைச்சரவை ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் கோரினர். இதற்கான மகஜரும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

குறிப்பாக, புத்தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள “House of Religion” திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அரசின் முழுமையான ஒத்துழைப்பை பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சுவிஸ் நாட்டின் பௌத்த விகாரையின் மதகுரு அனுருத்த தேரர், சுந்தரராம குருக்கள், அருட்தந்தை கெனடி, அஷ்ஷெய்க் எம். எஸ். அப்துல் முஜீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...