முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது:சட்டமா அதிபர்

Date:

ஜனாதிபதி உரித்துரிமைகள் தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயலவில்லை என்றும் மாறாக 1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துரிமைகள் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்படும் மேலதிக சலுகைகளைக் குறைப்பதே சட்டமூலத்தின் நோக்கம் என்றும் சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரித்துரிமைகள் (ரத்துசெய்தல்) பிரேரணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோர் கொண்ட அமர்வில், இந்த மனுக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச...

‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும்...

டிஜிட்டல் அடையாள அட்டை புரிந்துணர்வு ஒப்பந்தம்:அநுர – ஹரிணி உள்ளிட்டஅமைச்சரவைக்கு உயர் நீதிமன்றம் விசேட அறிக்கை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை...