இறைவனின் இருப்பு தொடர்பில் சிங்கள மொழியில் நூல் வெளியீடு நாளை

Date:

பிரித்தானிய ஆய்வாளரும் நூலாசிரியருமான ஹம்ஸா அந்தரீஸ் சோர்ஸிஸ் எழுதிய The Devine Reality என்ற ஆங்கில நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் நாளை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

ஆய்வுக்கும் கற்கைகளுக்குமான மன்றத்தினால் (FRS) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு நாளை (28) மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.

இறைவனின் இருப்பு தொடர்பில் விளக்கும் இந்த நூல் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி பீடத்தின் நாட்டிய மற்றும் அரங்கக் கலை வருகைதரு விரிவுரையாளர் சமன் புஷ்ப லியனகே யினால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழிப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசின்ஹ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுமேத வீரவர்தன, மத ஆய்வாளர் ஷான் சிராஜ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 802 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில், 2 மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால்...

ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச...

‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும்...