செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

Date:

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியம் (IUMS), உலகெங்கிலும் உள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காசா மக்கள் எதிர்கொள்ளும் “கொலைகள், இடம்பெயர்வு மற்றும் பட்டினி” பற்றியும் இந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் உலகில் பலரிடமிருந்து உதவிகள் இருந்தபோதிலும், சர்வதேச அளவிலான மூடி மறைப்புகள் மற்றும் சில ஆட்சிகளின் உடந்தைகள் காஸாவின் துன்பத்தைத் தணிக்கும் முயற்சிகளைத் தடுத்துள்ளதாக இத்திஹாதுல் ஆலமுல் உலமாஉல் முஸ்லிமீன் குறிப்பிடுகிறது.

இந்த நிலையில் , பிரார்த்தனை மூலம் படைத்தவனை நோக்கித் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு, காசா மக்களின் வெற்றிக்காகவும், அவர்களின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவதற்காகவும் தங்கள் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கேட்டுக்கொள்கிறது.

இந்த நோக்கத்திற்காக ஒன்றுகூடும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வேண்டுகோள்களை அல்லாஹ் நிராகரிக்க மாட்டான் என்றும் கத்தாரைத் தளமாகக் கொண்ட IUMS நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் கடிதத்தில் பொதுச் செயலாளர் டாக்டர் அலி முகமது முகமது அல்-சல்லாபி மற்றும் தலைவர் பேராசிரியர் டாக்டர் அலி மொஹியுதீன் அல்-கர்தாகி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...