ஜனாதிபதி அநுர குமார இன்று யாழ்ப்பாணம் விஜயம்: கடவுச்சீட்டு அலுவலகம் உள்ளிட்ட பல திட்டங்கள் அங்குரார்ப்பணம்!

Date:

வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த அபிவிருத்தி திட்டங்கள் அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன.

இன்றையதினம் (01) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்டப் பணிகளையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார். யாழ். பிரதேச செயலகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், மண்டைதீவுப் பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகளுக்கான அடிக்கல் நடுகையும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளையதினம் (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு வட்டுவாகல் பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு அங்கமாக, தென்னை முக்கோண வலயத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, உலக தெங்கு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத் திட்டத்தை புதுக்குடியிருப்பு கந்தசாமி கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்!

நாளை செப்டம்பர் 7ஆம்  ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. சந்திரகிரணத்தின்போது...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா...

மீலாத் தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டில் சமூக நல்லிணக்க பேரணி!

தமிழ்நாடு தோப்புத்துறையில் மீலாது நபியை முன்னிட்டு தோப்புத்துறையில் ஹஜ்ரத் ஷெய்கு அப்துல்...

பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில்..!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர...