இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைப்பதற்கான முயற்சி பின்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் இந்த நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்,

இதன் ஆரம்பக் கூட்டம் இன்று செப்டம்பர் 12ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பாராளுமன்றத்தின் CR 04 இல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இச்சங்கத்தில் சேர விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பாராளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் அமைக்கும் முயற்சி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம்...

சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக...

ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை...

இனி பலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது இஸ்ரேல் பிரதமர்

இனி பலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு...