இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைப்பதற்கான முயற்சி பின்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் இந்த நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்,

இதன் ஆரம்பக் கூட்டம் இன்று செப்டம்பர் 12ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பாராளுமன்றத்தின் CR 04 இல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இச்சங்கத்தில் சேர விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பாராளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் அமைக்கும் முயற்சி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...