கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது.

இதனால், நீர் விநியோக நிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து போதுமான அளவு நீரை சேமித்து வைக்குமாறும் அது அறிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளை பாதிக்கும்:

கொழும்பு 01 தொடக்கம் 15
பத்தரமுல்ல
பெலவத்த
ஹோகந்தர
கொஸ்வத்த
தலவத்துகொட
ராஜகிரிய
மிரிஹான
மதிவெல
நுகேகொடை
நாவல
கொலன்னாவை
ஐடிஎச்
கொட்டிகாவத்தை
அங்கொடை
வெல்லம்பிட்டி
ஒருகொடவத்தை
முல்லேரியாவ
மஹரகம
பொரலஸ்கமுவ
தெஹிவளை
இரத்மலானை
மொரட்டுவ.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...