கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி, சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு கல்லூரியின் அப்துல் கஃபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும். இதில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் கலை மற்றும் அறிவியல் தெற்காசிய மையத்தின் கலாநிதி பட்ட இணை அறிஞர் ஏ.ஆர்.எம். இம்தியாஸ் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்த உள்ளார்.
கல்வி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் பழைய மாணவர்களும், மாணவர் சமூகமும் பெருமளவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.