முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

Date:

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

இந்த இரண்டாண்டு போரில் ஏறத்தாழ 60,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எனவே போர் நிறுத்தம் குறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இரு தரப்பும் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. 20 அம்சங்கள் கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், தாங்கள் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்திருக்கிறது.

பதிலுக்கு தங்கள் நாட்டு சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், தற்காலிகமாக தாக்குதல்கள் நிறுத்தப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறத்த ஒப்பந்தம் குறித்த இரு தரப்பும் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்கும்.

பலஸ்தீனம் மீதான தாக்குதல் பாலஸ்தீன நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான முயற்சிகளில் அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டு வந்தது.

இதற்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு 7ஆம் திகதி பலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, போர் வெடித்தது.

ஹமாஸை அழிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று இஸ்ரேல் கூறினாலும், இதுவரை கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான். எனவே போரை கைவிட வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது.

வாய் வார்த்தையாக அமெரிக்காவும் போருக்கு எதிராக தன்னை காட்டிக்கொண்டாலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானங்கள் கொண்டுவரும்போதெல்லாம் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்துவிடும்.

ஆனால் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை நீண்ட நாட்களுக்கு இஸ்ரேலால் தாங்க முடியவில்லை. ஒரு காலத்தில் இஸ்ரேலின் நட்பு நாடாக இருந்தவை கூட தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க தொடங்கிவிட்டன.

இப்படியே போய்விட்டால் நம்மை ஒரு நாடு கூட மதிக்காது என்று உணர்ந்துக்கொண்ட அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....