வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, அது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொலையில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடுத்த 02 முதல் 03 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...