மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகம்

Date:

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலைகளின் புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும்...

போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு: ஜனாதிபதி அநுரகுமார

போதைப்பொருளுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார...

வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்

கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது...

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள்...