வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்

Date:

கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று (29) கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்து சிறப்பித்தார்.

இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதையடுத்து, துருக்கி தூதுவர் வரவேற்புரையாற்றினார். துருக்கி ஜனாதிபதியின் தேசிய தினச் செய்தியும் வாசிக்கப்பட்டது.

அதன்பின் அமைச்சர் சுனில் செனவி சிறப்புரையாற்றியதுடன், இலங்கை மற்றும் துருக்கிக்கான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...