போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு: ஜனாதிபதி அநுரகுமார

Date:

போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின்  முழுமையான உரை,

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும்.

அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக போதைப்பொருளை தடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். போதைப்பொருளுக்கு உதவும் பொலிஸார் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் விலக்குவோம்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும்.

“போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு. குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருகின்றனர்.

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர். இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருகிறது.

800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது.

அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது.என்றார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழியொன்றையும் எடுத்தனர்.

இலங்கையானது நீங்களும் நானும் அன்புகாட்டும் எமது மதிப்பிற்குரிய தாய்த்திரு நாடாகும். விச போதைப்பொருள் அச்சுறுத்தலானது, எமது தேசத்தின் வளமான எதிர்காலத்திற்கு இடையூறு விளைவிக்கும் தேசிய அனர்த்தம் ஒன்றை தற்போது உருவாக்கியுள்ளது.

அதிலிருந்து எமது சமூகத்தை முற்றுமுழுதாக விடுவித்தலானது, தற்போது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். இந்த சவாலை வெற்றிகொள்வது சமூகம் என்ற வகையில், தவிர்க்கமுடியாத ஒரு பொறுப்பாகும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

 

இந்த விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலானது எமது சமூகத்தின் பொருளாதார உறுதிப்பாட்டினையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் குடும்ப பாசம் மற்றும் பிணைப்பினையும் மகிழ்ச்சி மற்றும் களியாட்டத்தையும் இழக்கச்செய்துள்ளது.

 

அதேபோன்று இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் மூலமாகவும் மாறியுள்ளது. அதலால் நாம் விஷ போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு, மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக நிராகரிப்போம் என்றும் எதிர்ப்போம் என்றும் அதனுடன் தொடர்பான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உதவுவோம் என்றும், உறுதி செய்கின்றோம். அத்துடன் விஷ போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு உதவுவோம் என்றும், அவர்களை மீண்டும் நிறந்ததொரு சமூக வாழ்க்கைக்குத் திசை திருப்புவதற்கு உதவுவோம் என்றும் உறுதிசெய்கின்றோம்.

2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் “ரட்டம எகட்ட”  தேசிய செயல்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் எம்மால் அளிக்கப்படும் இந்த உறுதியுரையை எமது தாய்நாட்டிலிருந்து விஷ போதைப்பொருட்களின் அச்சுறுத்தல் முற்றுமுழுதாக ஒழிக்கப்படும் வரை கைவிடப்படாத தேசிய பொறுப்பொன்றாக கருதி, செயல்படுவோம் என்றும் உறுதி செய்கின்றோம்.

இந்தத் தேசியத் திட்டத்தில், மத குருமார்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதை நோக்கதாக கொண்ட தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ‘முழு  நாடும் ஒன்றாக’ தேசிய வழிநடத்தல் சபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில்  கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முதன்முறையாக கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும்...

வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்

கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது...

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள்...

மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகம்

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய...