கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் 2,46,521 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 பேருமாக மொத்தம் 3,41,525 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் பரீட்சார்த்திகள் தங்கள் அனுமதி அட்டைகளைப் பெற்றிருப்பார்கள். பெறாதவர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அனுமதி அட்டையில் உங்கள் பெயர், பாடம் குறியீடுகள் மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொழி ஆகியவை சரியாக உள்ளதா என கவனமாகச் சரிபார்க்கவும். ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், தாமதமின்றி திணைக்களத்தைத் தொடர்புகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...

புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...