வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
கொட்டாவையில் உள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் வங்கி அட்டை கட்டண முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பஸ்களுக்கான கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் செலுத்தலாம்.
அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
